மழை

கையில் குடை இருந்தும்
முழுதும் நனைந்தோம்
மழை நின்ற பின்னும்
கை கோர்த்து நடந்தோம்
கடற்கரை மணல் வெளியில்

உடைகள் பாதி நனைந்தும் .. பாதி உலர்ந்தும் ..

மழையின் சந்தம் தரும்
இன்றும் மனதில் ஆனந்தம்
ஈர மண்ணின் வாசம் நினைவை
எங்கோ கொண்டு சேர்க்கும்
உறவுகள் உலர்ந்தாலும்
மனதின் ஓரம் தங்கும் ஈரம்!

Comments

Popular posts from this blog

A truly amazing person

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

India's date with the moon