Monday, December 12, 2011

கடற்கரை மணல்வெளியில்

கடற்கரை மணல்வெளியில்
கால் தடம் பட்டதும்
கடமை உணர்வோடு
கடல் அலை கலைக்கும்

நான் என்னும் எண்ணம்
மனதில் தோன்றிய மறுகணம்
தான் இன்னும் இருப்பதைக்
காலம் தவறாமல் உணர்த்தும்

No comments: