Tuesday, April 22, 2008

Thanimayil Amarnthen - A Poem

I think this is the most recent one I wrote. Written in Oct 2006 :-)

தனிமையில் அமர்ந்தேன்
வாழ்க்கையை மதிப்பிட்டேன்
நினைவுகள்.. நிகழ்வுகள்..
அனுபவங்கள்.. கனவுகள்.. (என் முன்)
தோன்றின . . மறைந்தன . .

கடந்த காலம் வீணான
உயிர் மூச்சாய்த் தோன்றிட
தோன்றியது வருங்காலம்
வீணாகும் உயிர் மூச்சாய்

அழகான ஓர் அமைதி
மனம் எங்கும் பரவ
கடந்ததும் இனி வருவதும்
வாழ்வும் அதன் முடிவும் (நின்றன)
சமமாய் என் முன்னே

Sunday, April 20, 2008

Innamum Irukkiren - Poem 2

Number two .. Again concept taken from my uncle's poem and modified in Mar 1997 to see if I could write :-)

இன்னமும் இருக்கிறேன்
நண்பர்க்குப் பகை ஆனாலும்
நம்பிக்கை தீர்ந்து போனாலும்
முடிவகளுக்கு அன்னியமானாலும்
கனவுகளில் தோற்றம் இழந்தாலும்
முகத்தில் கருமை படர்ந்தாலும்
கண்களில் ஒளி குறைந்தாலும்
இன்னமும் இருக்கிறேன்
சில முகங்களின் சிரிப்பில்
இனிமையான உன் நினைப்பில்
நீல வானின் நட்சத்திரம்
என்றாவது என் கையில்
மோதிரமாய் ஒளிரும் என்கிற
குருட்டு நினைப்பில்
இன்னமும் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்
அதுவல்லவோ முக்கியம்?

My first Poem

My daughter got hold of one of my old note books while we were cleaning my book shelf. It was full of poems that I had written over a few years.

I am giving the first one below. This was the first time I tried writing a poem way back in Mar 1997. I took one of the poems written by my uncle and tried to see if I could write something on similar lines. All lines to be interpreted as a young boy talking about his mother :-)

நான் இன்று உன்னிடம் வருவேன்
மார்கழி மாதப் பனிக் காற்றாய்
மாலை நேரத்து இளம் தென்றலாய்
நான் இன்று உன்னிடம் வருவேன்
ஒரு மழலையின் ஆர்வத்தோடு
கண்கள் விரிய நீ கதை சொல்வது
எத்தனை அழகு என்று சொல்லிப் போவதற்கு . .

நான் இன்று உன்னிடம் வருவேன்
மழையைக் கொணரும் கரு முகிலாய்
இன்பம் பொங்கும் கடல் அலையாய்
நான் இன்று உன்னிடம் வருவேன்
என் நெற்றியில் விழும் முடி விலக்கி
நீ கனிவாய் பதிக்கும் முத்தம்
எத்தனை அழகு என்று சொல்லிப் போவதற்கு . .