Thursday, September 21, 2017

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு

நீண்ட தமிழ் பதிவு .. முகநூலில் என்னுடைய முதல் பதிவும் கூட. 
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்து பாதி முடிந்த பிறகு என்னை ஓரு பயம் சூழ்ந்து கொண்டது. நம்மாழ்வார் எவ்வளவு பெரியவர் அவரைப் பற்றி நாம் எழுதுவதா என்று! இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு எழுதி முடித்து விட்டேன்.
யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை .. நமக்குத் தெரிந்த வரிகள். இது சடகோபரைப் (நம்மாழ்வார்) போல் என்று தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நான் நம்மாழ்வார் என்கிற சடகோபரைப் பற்றி முழுதாய் அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களைப் படித்து இன்னும் ஆராயவில்லை. நான் படித்த சிலவற்றுள் அதற்கு முன்னோர்கள் எழுதி வைத்த விளக்கங்களில் இருந்து சிலவற்றை படித்ததில் எனக்கு எட்டிய அளவில் சொல்கிறேன்.
வேதத்தை தமிழ்ப்படுத்தி என்னை மனம் கவர்ந்த ஈசனாம் திருமாலை மட்டுமே போற்றும் பாடல்கள் இவை என்பதை சில நிமிடங்கள் அப்புறப்படுத்தி வைத்து அப்பாடல்களில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருட்களையும் சிறிது நேரம் ஆராயாமல் அவற்றிலுள்ள தமிழை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்.
திருவிருத்தம் பாசுரங்களில் மாலையை வருணித்து வரும் சில உவமைகள்
1. வால்வெண்ணிலவு உலகாரச் சுரக்கும் வெண்திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை
பொருள்:
விண்ணில் இருக்கும் நிலவு என்கிற பசுவானது அழகிய வெண்மையான நிலவொளியை உலகம் எங்கும் நிறைக்கும் மாலைப் பொழுது
2. திங்களம்பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசுபட்ட
செங்களம் பற்றி நின்றெள்குபுன் மாலை
பொருள்:
சந்திரன் என்ற அழகிய பிள்ளை (தந்தயை இழந்து) தனிப்பட, உலகெங்கும் சிவந்த ஒளியைப் பரப்பும் சூரியன் என்கிற தன் தலைவன் மறைந்த செவ்வானம் ஆகிய போர்க்களத்தை அடைந்து மாலை என்னும் பெண் வருத்தத்தோடு நின்றாள்
3. சீரரசாண்டுதன் செங்கோல் சிலநாள் செலீஇக்கழித்த,
பாரரசொத்து மறைந்தது ஞாயிறு
பொருள்:
சிறப்பாக நீதி தவறாமல் அரசாண்டு தன் பதவிக் காலம் முடிந்த அரசனைப் போல் சூரியன் அஸ்தமித்தது
4. காரேற்றிருள் செகிலேற்றின் சுடருக்குளைந்து, வெல்வான்
போரேற்றெதிர்ந்தது புன்தலை மாலை
பொருள்:
கருத்த இருளாகிய எருது சிவந்த சூரியன் என்னும் எருதை வெல்லும் பொருட்டு போர் செய்ய எதிர்த்து நின்றது
என்ன அழகான எவ்வளவு வித விதமான உவமைகள் எப்பேற்பட்ட தமிழ்!
இது போல் தலைவியின் கண்களை வருணித்து பல உவமைகள் .. இன்னும் பல பல .. இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு?

Sunday, September 17, 2017

Haircut - A time for Reflection

Haircut is not only a time for reflection given the long stare at the mirror, It is also a time to hear some old songs which feature in channels that I never switch on these days. What used to take 6 songs easily with ads and waiting time now gets done in 3 songs. So it is not only me! At this rate barbers are going to be out of business soon! 😀
Coming back to the songs, it was Sridevi's songs today all by one music director. Was wondering how only the songs alone continue to remain young.. We all know how Sridevi looks now inspite of all the surgeries and Botox, but the music doesn't need all that. What great compositions!
Do I need to tell the music director's name?  Perai Sollavaa? Adhu nyaayam aaguma?! 😀

Saturday, July 29, 2017

மாற்றம்

மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல .. நானும்
வெற்றிகள் தந்த போதை தலை விட்டு தரை இறங்க
தோல்விகள் பழகிப் போன வலிகளாய் ஒதுங்கி நிற்க
தொலைந்து போய்க் கண்டு பிடித்த இன்பங்கள் மேலோங்க

மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல ..
கடந்தது போல் வருவதும்
நல்லதுக்கே என்று புன்னகையோடு காத்திருக்கும் நானும்!

Monday, May 1, 2017

எங்கள் எதிராசன்

It is ages since I sat and wrote a few lines.. After almost a year full of hearing about his deeds and visiting his shrines in several temples, somehow couldn't resist writing a few lines on Bhagavad Ramanujar on his 1000th Thirunakshathram.. Vaazhi ethirasan! Vaazhi ethirasan!

எங்கள் எதிராசன்
ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும்
மனதில் கோவில் கொண்ட அழகன்
ஆலயக் கதவுகள் அனைவர்க்கும் திறந்திட 
வழி வகுத்த முதல் தலைவன்
வேதத்திற்கு புது விளக்கம் சொல்லி 
விசிஷ்டாத்வைதம் தந்த அறிஞன்
பாரதம் முழுதும் சோர்வின்றி நடந்து 
வைணவம் வளர்த்த முனிவன்
கலியுகத்தில் பக்தி தழைக்க 
பல புதுமைகள் கொணர்ந்த நற்தலைவன் 

எங்கள் எதிராசன்
ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும்
மனதில் கோவில் கொண்ட அழகன்!

Saturday, April 22, 2017

Madurai Kallazhagar Temple visit

செஞ்சொற் கவிகாள்
உயிர்காத்தாட் செய்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள் கலந்து
நின்றார் அறியா வண்ணம்
என் நெஞ்சு முயிரும் அவையுண்டு 
தானே யாகி நிறைந்தானே!

In this pasuram Nammazhwar warns all poets who think of singing on Thirumaaliruncholai Kallazhagar as they are bound to be completely bowled over and subsumed. 
Left with same feeling after returning from the temple yesterday. The moolavar here is holding all 5 weapons but yet his face is so calm and beautiful!