Monday, May 1, 2017

எங்கள் எதிராசன்

It is ages since I sat and wrote a few lines.. After almost a year full of hearing about his deeds and visiting his shrines in several temples, somehow couldn't resist writing a few lines on Bhagavad Ramanujar on his 1000th Thirunakshathram.. Vaazhi ethirasan! Vaazhi ethirasan!

எங்கள் எதிராசன்
ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும்
மனதில் கோவில் கொண்ட அழகன்
ஆலயக் கதவுகள் அனைவர்க்கும் திறந்திட 
வழி வகுத்த முதல் தலைவன்
வேதத்திற்கு புது விளக்கம் சொல்லி 
விசிஷ்டாத்வைதம் தந்த அறிஞன்
பாரதம் முழுதும் சோர்வின்றி நடந்து 
வைணவம் வளர்த்த முனிவன்
கலியுகத்தில் பக்தி தழைக்க 
பல புதுமைகள் கொணர்ந்த நற்தலைவன் 

எங்கள் எதிராசன்
ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும்
மனதில் கோவில் கொண்ட அழகன்!

No comments: