Sunday, October 23, 2011

மழை

கையில் குடை இருந்தும்
முழுதும் நனைந்தோம்
மழை நின்ற பின்னும்
கை கோர்த்து நடந்தோம்
கடற்கரை மணல் வெளியில்

உடைகள் பாதி நனைந்தும் .. பாதி உலர்ந்தும் ..

மழையின் சந்தம் தரும்
இன்றும் மனதில் ஆனந்தம்
ஈர மண்ணின் வாசம் நினைவை
எங்கோ கொண்டு சேர்க்கும்
உறவுகள் உலர்ந்தாலும்
மனதின் ஓரம் தங்கும் ஈரம்!

No comments: