Sunday, October 9, 2011

மலைகளில் இறைவன் காட்டும் உருவம்

மலைகளில் இறைவன்
காட்டும் உருவம்
அறிவதில் உள்ளம்
பேரின்பம் கொள்ளும்

மெல்லிய காற்றில்
மலர்களின் வாசம்
சொர்க்கம் என்பதன்
அர்த்தம் சொல்லும்

ஏற்றமும் தாழ்வும்
உற்ற பாதைகள்
வாழ்க்கையின் தன்மையை
எளிதாய்க் காட்டும்

தடைகள் கடந்து
தாவும் அருவிகள்
ஆற்ற வேண்டிய
கடமையை உணர்த்தும்

கண் முன் விரியும்
காட்சிகள் யாவும்
நான் என்னும் சொல்லின்
அனர்த்தம் உணர்த்தும்

No comments: